Kanagaraj / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலிருந்து மாத்தளையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயிலுக்கே, கண்;டி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து அத்தாய், இந்த கொடூரமான காரியத்தை இன்று புதன்கிழமை காலை 7.15க்கு செய்வதற்கு முயன்றுள்ளார்.
தன்னுடைய மகனை அடித்து அடித்து இழுத்துவந்த அத்தாய், அந்த சிறுவனை இழுத்துபிடித்து ரயிலுக்கு தள்ளிவிடுவதற்கு முயன்றுள்ளார். இதனை, அவதானித்த கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரி, அச்சிறுவனை காப்பாற்றியுள்ளார்.
அவ்வாறு முயற்சி செய்த அந்த தாய், அங்கிருந்து தப்பியோடிய போதிலும், அவரை பின்னர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுவனின், தாய் என்று சந்தேகிக்கப்படும் தாய்க்கு இவர், கடைசி பிள்ளை என்றும், இந்த பிள்ளை தொடர்பில் கணவன், கணக்கில் எடுக்காமையால் அந்தபிள்ளை கொலைச்செய்வதற்கு முயன்றதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான அந்த பெண்ணும், அவரது கணவனும் கண்டியில் கூலிவேலைச்செய்வதாக அறியமுடிகின்றது.
17 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
01 Feb 2026
01 Feb 2026