2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ் ராபர்ட் வந்தடைந்தார்

R.Tharaniya   / 2025 மே 15 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ராபர்ட், செவ்வாய்க்கிழமை (13) அன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

57 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் நடைபெறும் முதல் சர்வதேச குத்துச்சண்டை போட்டியான ஆசிய இளைஞர் மற்றும் 22 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பிற்காக இலங்கை உட்பட ஆசிய பிராந்தியத்தில் உள்ள 29 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர். 

கிறிஸ் ராபர்ட் 05/13 அன்று செவ்வாய்க்கிழமை (13) துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம்  கிறிஸ் ராபர்ட், செவ்வாய்க்கிழமை (13) மாலை 4.40க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய மேலாளர் திருமதி. வசனா குமாரி மற்றும் இலங்கை குத்துச்சண்டை கூட்டமைப்பின் அதிகாரிகள் குழு அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

 

டி.கே.ஜி. கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X