2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

போர் பதற்றம் ; போட்டி ஒத்திவைப்பு

R.Tharaniya   / 2025 மே 15 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி‘' பெங்களூரூவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் திகதி நடக்க இருந்தது.

இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவுவதால் இந்த போட்டி மறு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X