R.Tharaniya / 2025 மே 29 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை படப்பிடிப்பிற்கு சிறந்த பின்னணியைக் கொண்ட நாடாக இருப்பதால், விருது பெற்ற இந்திய தேசிய திரைப்பட இயக்குனர் தீபா மேத்தா, உலக திரைப்படத் துறையின் கவனத்திற்குக் கொண்டு வரவும், நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
டாக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்குப் பிறகு, இலங்கையின் பல்வேறு பகுதிகளை தனது படைப்புகளுக்குப் பெருமளவில் பயன்படுத்திய திரைப்பட இயக்குனர் தீபா மேத்தா ஆவார்.
இலங்கையில் படமாக்கப்பட்ட மூன்று படங்களும் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வாட்டர், மிட்நைட்ஸ் சில்ட்ரன் மற்றும் ஃபன்னி பாய் ஆகியவை மூன்று படங்களாகும்.
மிட்நைட்ஸ் சில் ரன் மற்றும் வாட்டர் ஆகிய இரண்டு படங்கள் பென்டோட்டாவில் உள்ள சினமன் பீச் ஹோட்டலில் உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு முன்பாக நாளை (30)திரையிட திட்டமிடப்பட்டுள்ளன.
டி.கே.ஜி. கபில



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .