Editorial / 2025 ஜூன் 24 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவர் கொக்கைன் உபயோகித்தது உறுதியானதை அடுத்து, விசாரணை மற்ற நடிகர்கள், நடிகைகள் நோக்கி தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, நடிகை ஸ்ரீரெட்டியின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஸ்ரீரெட்டி, பல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில் ஸ்ரீகாந்தின் பெயரும் இடம்பெற்றது. ஸ்ரீரெட்டி கூறுகையில்,
“நான் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் விளம்பரம் தேடுவதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இவை என்னையும் பாதிக்கின்றன. ஒரு பிரபல நடிகர், பட வாய்ப்பு தருவதாக அழைத்து, என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். மேலும், கொக்கைன் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தினார்.
நான் மறுத்தேன், முடியவே முடியாது என திமிறினேன். உடனே, அவரது நண்பர்கள் சிலரை வர வைத்து என் இரண்டு கால்களையும் ஆளுக்கு ஒரு பக்கமாக விரித்து பிடித்துக்கொண்டு.. என் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, என் உதட்டின் அடியில் கொக்கைனை தடவினர். அடுத்த நொடியே என் உதடுகள் மறத்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. மறுநாள் மாலை வரை அந்த நிலையிலேயே இருந்தேன். என் கால்களை விரித்து பிடித்துக்கொண்டு அந்த உறுப்பில் போதை பொருளை தடவினார்.
அந்த நேரத்தில் அந்த நடிகர் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்,” என்று திடுக்கிடும் வகையில் விவரித்தார். ஸ்ரீகாந்தின் கைது தொடர்பான செய்தி வெளியான நிலையில், ஸ்ரீரெட்டி குறிப்பிட்ட நடிகர் யார் என்பது குறித்த விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025