2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஏங்குகிறார் அனுஷ்கா...

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை அனுஷ்கா. அவரைத் தங்கள் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ மணிரத்னம் படத்தில் நடிக்க ஏங்குகிறார்.

இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பது தான் தனது கனவு என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'முதலில் மாதவனுடன் அறிமுகமாகி பின்னர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தற்போது அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றன. படத்தை தெரிவு செய்வதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயக்குனர் யார் என்று பார்த்து தான் படத்தை தெரிவு செய்யவிருக்கிறேன்.

தமிழில் எனக்கு நம்பிக்கை அளித்த படம் தெய்வத் திருமகள். தெலுங்கில் பாபு, தமிழில் மணிரத்னம் படங்களில் நடிப்பதுவே எனது கனவு' என்கிறார்.


You May Also Like

  Comments - 0

  • rys Thursday, 11 August 2011 09:27 PM

    வாழ்த்துகிறேன் .................................

    Reply : 0       0

    MJF.Fahira&Farija&Amna Monday, 15 August 2011 08:42 PM

    வாழ்த்துக்கள் கோடி.............

    Reply : 0       0

    il Wednesday, 14 September 2011 04:31 PM

    முயற்சி திருவினையாக்கும் பாப்பா ! உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X