2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டில் திடீர் சோதனை

J.A. George   / 2021 நவம்பர் 15 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக, பொலிஸ் கட்டுப்பாட்டு அறையை நேற்று இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர்  மிரட்டல் விடுத்தார்.

அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து பொலிஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என பொலிஸார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த நபர் ஏற்கெனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பொலிஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .