2024 மே 02, வியாழக்கிழமை

மோகன்லால் தயாரிப்பாளர் அதிரடி

J.A. George   / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் கடந்த பெப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனால் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்கிற சரித்திர திரைப்படத்தையும் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் அன்டனி பெரும்பாவூர் அறிவித்து உள்ளார்.

இதுதவிர, அதே தயாரிப்பாளரின் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் ‘புரோ டாடி’, ‘டுவெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் புலிமுருகன் இயக்குநர் இயக்கும் திரைப்படம் என மேலும் 4 திரைப்படங்களையும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட அவர் முடிவு செய்துள்ளாராம்.

இந்த திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட திரைப்படக்குழுவினர் அனுமதி கேட்டுள்ளனர்.

எனினும், திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் திரையரங்குக்கு பதிலாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .