2025 ஜூன் 21, சனிக்கிழமை

வனிதாவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Editorial   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை வனிதா, பீட்டர் போல் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்துகொண்டதால் பீட்டர் போலின் முதல் மனைவி இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார்.

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் போலின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் விவாரத்தை ஏற்படுத்திய நிலையில்,குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதை வனிதா தனது யுடியூப் சேனல் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் பீட்டர் போலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் , பீட்டர் போல், வனிதா திருமணம் தொடர்பாக இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி  வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும்  நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என நம்பப்படுகின்றது..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .