2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக பதிவிட்டால் நிரந்தர தடை: எக்ஸ்

Editorial   / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எக்ஸ் தளத்​தில் உள்ள ‘க்​ரோக்’ ஏஐ செயலி மூலம் பெண்​களின் படத்தை ஆபாச​மாக மாற்றி சிலர் வெளி​யிடு​வ​தாக​வும், இது போன்ற குற்​றங்​களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மாநிலங்​களவை எம்​.பி பிரி​யங்கா சதுர்​வே​தி, மத்​திய மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுக்கு கடந்த மாதம் 29-ம் திகதி கடிதம் அனுப்​பினர்.

இதையடுத்து இந்த விவ​காரத்தை எக்ஸ் தளத்​தின் கவனத்​துக்கு மத்​திய அரசு கடந்த 2-ம் தேதி கொண்டு சென்​றது. உள்​நாட்டு சட்​ட ​வி​தி​முறை​களை மீறி ஆபாச படங்​கள், வீடியோக்​கள், சட்​ட​விரோத தகவல்​கள் எக்ஸ் தளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படு​கின்​றன. இவற்றை நீக்கி போலி கணக்​கு​களை எக்ஸ் தளம் முடக்க வேண்​டும் என மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யது.

இது தொடர்​பாக விரி​வான அறிக்​கையை 72 மணிநேரத்​துக்​குள் அளிக்க வேண்​டும் என மத்​திய அரசு கூறி​யிருந்​தது. இதையடுத்து எலான் மஸ்க் மற்​றும் எக்ஸ் தளம் ஞாயிற்றுக்கிழமை (04) விடுத்த அறிக்​கை​யில் கூறிய​தாவது:

எக்ஸ் தளத்​தில் ‘க்​ரோக்’ ஏஐ செயலியை பயன்​படுத்​துபவர்​கள் சட்​ட​விரோத தகவல்​கள் மற்​றும் படங்​களை பதிவேற்​றம் செய்​தால் கடும் விளைவு​களை சந்​திக்க நேரிடும். சட்​ட​விரோத தகவல்​கள், படங்​கள், வீடியோக்​களை பதிவேற்​றும் செய்​பவர்​களின் கணக்​கு​களுக்கு நிரந்​தர​மாக தடை விதிக்​கப்​படும். இவ்​வாறு எக்​ஸ் தளம்​ கூறி​யுள்​ளது.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .