Editorial / 2026 ஜனவரி 02 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்வியங்காடு காளிகாதேவி சமேத வீரபத்திர சபரீச ஐயப்ப கோவில் பால்குட பவனி, வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது.
சட்ட நாதர் சிவன் கோவிலில் ஆரம்பித்த பால் குட பவனி ஊர்வலமாக கல்வியங்காடு காளிகா தேவி சமேத வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலை சென்றடைந்தது.
மங்கல வாத்தியங்கள் முழங்க பெருமளவான பெண்கள் தமது நேர்த்திக் கடன்கள் நிறைவேற்ற பால் குட பவனியில் இணைந்தனர். அதனை தொடர்ந்து ஐயப்பனுக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றது.
நிதர்ஷன் வினோத்










அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .