Gavitha / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 29ஆம ;திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், நேற்று புதன்கிழமை (09) 12ஆம் நாள் உற்சவம் நடைபெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் குடும்பத்தினரின் உபயமாக நேற்றைய திருவிழா நடைபெற்றது. அன்று மாலை முருகப்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் இன்று வியாழக்கிழமை (10) காலை 11.00 மணிக்கு புதிதாக செய்யப்பட்ட ரதத்தின் வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது. மாலை சம்பரைத் திருவிழா நடைபெறும்.
நாளை வெள்ளிக்கிழமை (11) காலை 8.00 மணிக்கு ரதோற்சவம் நடைபெற, திருவருள் பாலித்துள்ளது.


31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago