எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (05) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி மாலை தங்கரதமும், 14ஆம் திகதி மாலை திருமஞ்ச திருவிழாவும், 15ஆம் திகதி மாலை திருக்கைலாய வாகனமும், 17ஆம் திகதி சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 19ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
மகோற்சவ காலங்களில் வசந்தமண்டப பூஜை காலை 10 மணிக்கும், மாலை 06.15 மணிக்கும் நடைபெறும்.
தேர் மற்றும் தீர்த்த திருவிழா அன்று காலை 7 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெறும்.
25 minute ago
34 minute ago
56 minute ago
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
56 minute ago
15 Mar 2026