Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட மறைக்கோட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, கல்லியங்காடு கிறிஸ்த மயானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கல்லறைப்பெருவிழா நடைபெற்றது.
இதன்போது,மட்டக்களப்பு மாவட்ட மறைக்கோட்டத்தின் முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளாரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்லறைகள் அலங்கரிக்கப்பட்டு உறவினர்களினால் ஒளியேற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை, புளியடிக்குடா சேமக்காலையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago