2025 மே 21, புதன்கிழமை

துர்க்காபுரம் பேரம்பல ஆலய வேள்வி

Super User   / 2011 ஜூன் 11 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)


தெல்லிப்பளை துர்க்காபுரம் பேரம்பல ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வைரவருக்கு பாரியளவில் பொங்கல் இடம் பெற்றதுடன் பாரிய படையல்களும் இடம் பெற்றன.

நூற்றுக்கணக்கான பொது மக்கள் இதில் கலந்து கொண்டதுடன்

இதனைத் தொடர்ந்து பாரியளவில் வேள்வியாக கடாக்கள் மற்றும் கோழிகள் பலியிடும் நிகழ்வும் இடம் பெற்றது.  பெரிய கடாக்கள் என்பன மாலைகள் அணிவிக்கப்பட்டு வெடிகள் கொளுத்தி உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு ஒலி பெருக்கிகள் சகிதம் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு வெட்டப்பட்டன.

சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட கடாக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளும் ஆலயத்தில் பலியிடப்பட்டன.



 
 


You May Also Like

  Comments - 0

  • S NIranjan Saturday, 11 June 2011 11:00 PM

    மிருகப்பலி எப்போது நிறுத்தப்படும்? இவ்வகை நிகழ்வு இந்து சமயத்தின் பேரில் நடப்பது கண்டிக்கத்தக்கது.

    Reply : 0       0

    sivaram Sunday, 12 June 2011 02:25 PM

    அதிகம் படித்தவர்கள் வதியும் இடத்தில் இப்படி நடக்கலாமா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .