Super User / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாளங்குடா அருள்மிகு நிஸப்தம் ஸ்ரீ மஹா விஸ்ணு தேவஸ்தானத்தின் 14ஆவது கிருஸ்ண ஜெயந்தி பெருவிழாவை முன்னிட்டு மகாயாகமும் கணபதி ஹோம பூஸையும் இன்று காலை தேவஸ்தானத்தில் நடைபெற்றது.
கொட்டகலை சப்தரிசி இந்து குரு பீடாதிபதி பிரம்மஸ்ரீ குமார விக்கினேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ வே.கருணாகரன் குருக்கள் உட்பட பல சிவாச்சாரியார்களும் பூஜை வழபாடுகளை நடாத்தினர்.
இந்நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இவ்வழிபாடுகளில் பங்கு கொண்டனர். இதன்போது, நாட்டின் அமைதி சமாதானத்திற்காகவும் விஜேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .