2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திருக்கல்யாண நிகழ்வு

Super User   / 2011 நவம்பர் 03 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முருக பெருமானுக்கும் தேவேந்திரனின் மகளான தெய்வானை மற்றும் வள்ளி அம்மை ஆகியோருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு பாண்டிருப்பு ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருமணம் செய்து வைத்தல், உள் வீதி ஊர்வலம், வசந்த மண்டபத்தில் அமர்தல் மற்றும் பொன் ஊஞ்சல் ஆட்டம் போன்ற சடங்குகள் இடம்பெற்றன.

கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று புதன்கிழமை சூரசம்ஹாரம் முடிவுற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வுகளில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .