Suganthini Ratnam / 2012 ஜனவரி 09 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மார்கழி மாதத்தில் இந்துக்களால் சிவனை நினைத்து திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்ற பத்து நாட்களிலும் கோவில்களில் அதிகாலை வேளையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், மார்கழி மாதம் பீடை நிறைந்த மாதமாக கருதப்படுவதால் திருவெண்பாவை விரத நாட்களில் வைகறையில் துயிலெழுந்து நீராடி இறைவனை தரிசித்த பின் திருவெண்பாவைப் பாடல்களை இசைத்தவாறு ஊர்கள் தோறும் சென்று பள்ளியெழுப்புவது இத்திருவெண்பாவையின் அனுஷ்ட்டான முறைகளில் ஒன்றாகும்.
இந்த நிலையில் திருவெண்பாவையின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருவெண்பாவை ஆருத்திரா தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
51 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago