2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலை ஸ்ரீ முத்து மாரியம்பாள் ஆலய மஹோற்சவம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

 
திருகோணமலை ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து பத்து நாட்களுக்கு இடம்பெறவுள்ள இவ்வருடாந்த பிரம்மோற்சவகத்தின் இரண்டாம் நாளான நேற்று வியாழக்கிழமை அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வருதல் இடம்பெற்றது.

எட்டாம் நாளான எதிர்வரும் 1 ஆம் திகதி தீமிப்பு  திருவிழா இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சித்திரைத் தேர்த் திருவிழாவும் மறுநாள் சித்திரா பூரணை தினத்தன்று அதிகாலை சமுத்திர தீர்த்தோற்சவத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .