2025 மே 17, சனிக்கிழமை

நள்ளிரவு ஆராதனை

Kogilavani   / 2015 ஜனவரி 01 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


புத்தாண்டை, வரவேற்கும் நள்ளிரவு ஆராதனை புதன்கிழமை (31) மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ் மற்றும் பேராலயத்தின் உதவிப் பங்குத் தந்தை கிறிஸ்ரியன் வின்சன்ட் ஆகியோர் புதுவருடப்பிறப்பு கூட்டுத்திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

பேராலயத்தின் பாடல் குழுவினரால் புதுவருடத்தை வரவேற்கும் பாடல்கள் மற்றும் இயேசு பிரானின் பெருமையை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடப்பபட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .