Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா சித்திரைப் புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வருடாந்த மகோற்சவம் நடைபெற்றது.
மருதடி பிள்ளையார் ஆலயம் 2004ஆம் ஆண்டு பாலஸ்தானம் செய்யப்பட்டு கோவில் முற்றாக இடிக்கப்பட்டு கருங்கல்லினால் நிர்மணிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் கடந்த பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி நடைபெற்றது.
2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு இறுதி வரை ஆலயத்தின் கட்டிடப் பணிகள் 250 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு, கருங்கல் ஆலயமாக மாற்றப்பட்டது. இவ்வாலயத்துக்கான சிற்ப வேலைப்பாடுகளை இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்தபதிகள் மற்றும் சிற்ப கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 10 வருடங்களின் பின்னர் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
52 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
52 minute ago
57 minute ago
1 hours ago