Princiya Dixci / 2015 ஜூன் 18 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
கதிர்காம ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு பாத யாத்திரைக் குழுவின் பயணம், மட்டக்களப்பு நகர வீதி வழியாக இன்று வியாழக்கிழமை (18) சென்றது.
வெருகலம்பதியிலிருந்து கடந்த 06ஆம் திகதி ஆரம்பமான இந்த பாத யாத்திரை, இன்று (18) காலை ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.
ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து இன்று மாலை ஆரம்பித்த பாத யாத்திரையை நகர வீதிகள் வழியாக மேற்கொண்டு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று தங்கவுள்ளதாக யாத்திரீகர்கள் தெரிவித்தனர்.

13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026