Sudharshini / 2015 ஜூன் 27 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினையொட்டி வெள்ளிக்கிழமை (26) பாற்குட பவனி நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகிய பாற்குட பவனியானது திருமலை வீதியூடாக கொக்குவில் வீரம்மாகாளியம்மன் ஆலயத்தினை வந்தடைந்தது.
ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு வியாழக்கிழமை (25) ஆரம்பமானது.
ஏழு தினங்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ள வருடாந்த திருச்சடங்கில் அலங்கார சடங்கு, கும்பச்சடங்கு, ஊர்வலச்சடங்கு, கலியாணச்சடங்கு, பள்ளையச்சடங்கு என சடங்குகள் நடைபெறும்.
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026