2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலய பாற்குட பவனி

Sudharshini   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை பாலமுனை திராய்க்கேணி ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்கதவு திறத்தல் சடங்கினையொட்டி புதன்கிழமை (01) பாற்குடபவனி நடைபெற்றது.

பாலமுனை திராய்க்கேணி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாற்குடபவனியானது, மாரியம்மன் ஆலய வீதியூடாக ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலயத்தினை வந்தடைந்தது.

ஆலயத்தின் வருடாந்த திருக்கதவு திறத்தல் திருச்சடங்கு திங்கட்கிழமை (29) ஆரம்பமானது. இன்றிரவு நடைபெறவுள்ள பௌர்ணமி தின பூஜையுடன் சடங்குகள் நிறைவடையவுள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .