Sudharshini / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாமாங்கம் புனித சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த கொடியேற்ற விழாவை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை பேதுருஜீவராஜ் நடாத்தினார். தொடர்ந்து பத்து நாட்களுக்கு ஆலயத்தின் திருவிழா நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் சனிக்கிழமை மாலை மாதாவின் திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.
வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தில் தினமும் விசேட செபமாலை நிகழ்வுகளும் விசேட திருப்பலிகளும் நடைபெறவுள்ளன.





9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026