Niroshini / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதனைமுன்னிட்டு,இன்று காலை மட்டக்களப்பு, அரசடி சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கொடியேற்றி வருடாந்த உற்சவத்தை ஆரம்பித்து வைத்தார்.
10 தினங்கள் நடைபெறவுள்ள இவ் உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி உள்வீதி,வெளிவீதிய உலா என்பன நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும் சனிக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

31 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
09 Nov 2025