Sudharshini / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை, பின்னவலை அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம், நாளை வியாழக்கிழமை (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைபெற உள்ள இத்திருவிழாவில், இன்று வியாழக்கிழமை மாலை கரகம் பாலித்தலும் நாளை வெள்ளிக்கிழமை தீமிதிப்பு, அன்னதானமும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி, அம்பாள் வெளிவீதி உலா வருதலும் 13 ஆம் திகதி ஆன்மீக சொற்பொழிவும் நடைபெறவுள்ளதுடன் 14 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவடையவுள்ளது. பிரதம குருக்கள் ஸ்ரீ சுப்ரமணிய மனோசர்மா தலைமையில் மகோற்சம் நடைபெற உள்ளது.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago