Editorial / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

வேண்டுவோர்களுக்கு வரங்களை அள்ளி அருளும் மகாலட்சுமியின் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இன்று (25) இடம்பெற்றன.
இந்நிலையில் இவ்விரத உற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கு அபிஷேக ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் வரலட்சுமிவிரத நூல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த உற்சவத்தை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் உற்சவத்தினை நடாத்திவைத்தனர். இதில் பலபாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்




காரைதீவு ஸ்ரீ நாராயணன் சுவாமி ஆலயத்தில் வரலட்சுமி விரதமானது வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை(25) நடைபெற்றபோது...
வி.ரி.சகாதேவராஜா






7 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
26 minute ago