Sudharshini / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, வேவெஸ்ஸ - தெபத்தை பிரிவு, (ஏழாம் கட்டை) அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை, புண்ணியாதானம், யாக பூசை மற்றும் சுவாமிகளின் திருவுருவச் சிலைகளுக்கு எண்ணைக் காப்பு சாத்துதல் என்பன இடம்பெறவுள்ளன.
ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் கருப்பையாபிள்ளை ஜெயநாயகம் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கிரியாகால பூஜைகளை சிவ ஸ்ரீ பஞ்சாட்சர பாலச்சந்திர குருக்கள் நடத்தவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 12 தினங்களுக்கு மண்டலாபிஷேகப் பூஜைகள் இடம்பெறவுள்ளன.
9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026