Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 21 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாயின் தேசிய அடையாள அட்டையை (ID) எடுதுக்கொண்டு காதலனுடன் விடுதி ஒன்றிற்கு சென்ற யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி தென் மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் பரவியுள்ளது.
காதலி தென் மாகாணத்தைச் சேர்ந்தவர் மற்றும் அவரது காதலன் வேறு பகுதியை சேர்ந்தவர். இருவரின் குடியிருப்புகளுக்கும் இடையே உள்ள தூரம் காரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை.
அந்த பகுதியில் உள்ள பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் காதலி செல்லும் போது இருவரும் சந்திக்க திட்டமிட்டு, அதற்கான திகதியையும் குறித்தனர். காதலியின் நண்பிகள் இருவர் மற்றும் அவர்களது காதலர்களும் பயணத்தில் இணைந்தனர்.
சந்திக்கும் திகதியை காதலியிடம் தெரிவித்த காதலன், தன்னை சந்திக்க வரும் போது அடையாள அட்டையை கொண்டு வருமாறு காதலியிடம் கூறியுள்ளார். அடையாள அட்டை இல்லாததால் காதலி கவலைப்பட்டு, யோசிக்க ஆரம்பித்தார்.
புதிய அடையாள அட்டை கோரியிருந்தாலும், அது கிடைக்க தாமதமானதால், பிரச்சனைக்குத் தீர்வு காணும் எண்ணத்தில், அம்மாவின் அடையாள அட்டை நினைவுக்கு வந்தது. அந்த இளம்பெண் அந்த அடையாள அட்டையை எடுத்து தாய்க்கு தெரியாமல் பையில் போட்டுள்ளார். குறிப்பிட்ட நாளில், காதலர்கள் குழு ஒரு கடலோர நகரத்திற்கு வந்து, கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு விடுதிக்குச் சென்று சுதந்திரமாக அமர்ந்து காதலை ரசித்தனர்.
விடுதியில் இளம் ஜோடிகள் இருப்பதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் விடுதியில் சோதனை நடத்தினர்.
விடுதியில் இருந்த இளைஞர்களின் அடையாள அட்டையை அதிகாரிகள் கேட்டனர், காதலன் தனது சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை வெறித்தனமாக வெளியே எடுத்தபோது, தனது பயணப் பையில் இருந்த அடையாள அட்டையை காதலி எடுத்துள்ளார்.
இரண்டு அடையாள அட்டைகளையும் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், காதலியின் பெயர் என்ன என்று காதலனிடம் அதிகாரிகள் கேட்டபோது, காதலன் சொன்ன பெயருக்கும் காதலி வழங்கிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் வேறு வேறாக இருந்ததால், அதிகாரிகள் காதலியின் அடையாள அட்டையை எடுத்து மீண்டும் சோதனை செய்தனர்.
அது அந்த இளம்பெண்ணின் அடையாள அட்டை அல்ல, மற்றொரு ஐம்பத்து மூன்று வயது பெண்ணின் அடையாள அட்டை என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் உணர்ந்தனர். விசாரணையில், காதலனை சந்திக்க தாயின் அடையாள அட்டையை கொண்டு வந்தது தெரியவந்தது. அதனையடுத்து அந்த யுவதியை அதிகாரிகள் எச்சரித்தனர்.
அன்று விடுதியில் இருந்த குழு மைனர்கள் இல்லை என்பதால் அதிகாரிகள் வெளியேறினர். இந்த சம்பவத்தை அவதானித்துக்கொண்டிருந்த பெண்ணின் தோழிகள் மற்றும் காதலர்கள் அதிகாரிகள் வெளியேறிய பின்னர் கேலி செய்தனர்.
தனக்கு நேர்ந்ததை பிறரிடம் எவ்வளவோ மறைக்க முயன்றாலும் தோழிகளின் கிண்டலால் தோழிகள் மத்தியில் கதை பரவியது.
நண்பர்கள் அடிக்கடி போன் செய்து அடையாள அட்டை உள்ளதா என கேட்பதாகவும், இதுபோன்ற சமயங்களில் இளம்பெண் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது.
13 minute ago
22 minute ago
36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
36 minute ago
44 minute ago