R.Tharaniya / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
1929: இந்திய சுதந்திர போராட்டத்தின்போது பகத் சிங், பதுகேஷ்வர் தத் ஆகியோர் டெல்லி சட்டசபையில் குண்டுவீசினர்.
1938: கொபி அனான், நோபல் பரிசு பெற்ற முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்
1950: இந்தியாவும் பாகிஸ்தானும் லியாகத் - நேரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1961: பாரசீக வளைகுடாவில் எம்.வி. தாரா கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தில் 281 பேர் பலி.
1970: எகிப்தில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசியதால் 46 பாடசாலை சிறார்கள் பலி.
1973: உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ காலமானார்.
1985: சுமார் 2000 பேர் பலியான போபால் விச வாயு கசிவுக்கு சம்பவத்திற்காக யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா வழக்குத் தொடுத்தது.
1992: இதய சத்திர சிகிச்சைக்கான குருதி பரிமாற்றத்தின் மூலம் தனக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான ஆர்தர் ஆஷ் அறிவித்தார்.
2000: அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2004: டார்பூர் மோதலை முடிக்கு கொண்டுவரும் முகமாக சூடான் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
2005: பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பரின் இறுதிக்கிரியையில் சுமார் 40 லட்சம் பேர் பங்குபற்றினர்.
2008: காற்றாலைகளை ஒருங்கிணைக்கும் உலகின் முதலாவது கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் பஹ்ரைனில் நிறைவுபெற்றன.
2013: சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் இணைவு. இவர்கள், அல்-நுஸ்ரா முன்னணியுடன் இணைந்து 'இஸ்லாமிய ஈராக் மற்றும் ஆஸ்-ஷாம் அரசு' என்ற பெயரில் இயங்குவதாக அறிவித்தனர்.
2013: ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் உயிரிழந்தார். (பி. 1925)
15 minute ago
20 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
30 minute ago
43 minute ago