Janu / 2024 ஒக்டோபர் 02 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1187: ஜெருசலேம் நகரம் சலாடினினால் கைப்பற்றப்பட்டது.
1869: மகாத்மா காந்தி பிறந்தார்.
1941: மொஸ்கோ மீது ஜேர்மனி பாரிய தாக்குதலை ஆரம்பித்தது.
1944: வார்ஸோ எழுச்சியை அடக்கி, போலந்தை ஹிட்லரின் நாஸிப் படைகள் கைப்பற்றின.
1964: புகைத்தலினால் புற்றுநோய் ஏற்படுமென விஞ்ஞானிகள் முதன்முதலாக அறிவித்தனர்.
1967: அமெரிக்காவின் உயர்நீதிமன்ற இணை நீதிபதியாக முதலாவது ஆபிரிக்க அமெரிக்கரான துர்ஹூட் மார்ஸல் பதவியேற்றார்.
1968: மெக்ஸிகோவில் ஒலிம்பிக் போட்டிகள் சில தினங்களில் ஆரம்பிக்கவிருந்த நிலையில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 25 பேர் பலி.
1970: அமெரிக்காவின்; விசிட்டா மாநில பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி நிர்வாகிகள், ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி.
1972: சொச்சி - கருங்கடலுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 105பேர் பலி.
1975: தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலமானார்.
1990: சைனீஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று குவாங்ஸு விமான நிலையத்தில் கடத்தப்பட்டு வேறு இரு விமானிகளுடன் மோதியதில் 132 பேர் பலி.
1993: ரஷ்யாவில் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினுக்கு ஆதரவான படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 25 பொலிஸார் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி.
1996: இலத்திரனியல் தகவல் சுதந்திர சட்டத்திருத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கையெழுத்திட்டார்.
1997: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆம்ஸ்டர்டாம் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
41 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
56 minute ago