Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1789: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. (இது ஆரம்பத்தில் வெளிவிவகார திணைக்களம் என்ற பெயரில் அறியப்பட்டது)
1812: நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சு இராணுவம் மொஸ்கோவின் கிரெம்ளின் நகருக்குள் புகுந்தது.
1821: கௌதமாலா, எல் சல்வடோர், ஹொண்டுராஸ், நிகரகுவா, கொஸ்டா ரிக்கா ஆகியன ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக கூட்டாக சுதந்திர பிரகடனம் செய்தன.
1935: நியூரம்பர்க் சட்டங்களினால் ஜேர்மனியில் யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
1940: ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி சுவஸ்திகாவை தனது புதிய தேசிய கொடியாக அங்கீகரித்தது.
1945: அமெரிக்காவில் சூறாவளியினால் 366 பேர் பலி.
1947: ஜப்பானில் சூறாவளியினால் 1077 பேர் பலி.
1959: அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதலாவது சோவியத் தலைவரானார் நிகிட்டா குருசேவ்.
1968: சோவியத்தின் ஸோண்ட் 5 எனும் விண்கலம் சந்திரனை சுற்றி வந்து பூமிக்குத் திரும்பிய முதலாவது விண்கலமானது.
1974: வியட்நாம் விமானமொன்று கடத்தப்பட்டு பின்னர் விபத்துக்குள்ளானதால் 75 பேர் பலி.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025