R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
1865: அமெரிக்காவில் மிசிசிப்பி நதியில் கப்பலொன்று வெடிப்புக்குள்ளாகி மூழ்கியதால், 1700 பேர் பலி.
1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினி ஜேர்மன் சிப்பாய் போல் வேடமணிந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது கிளர்ச்சியாளர்ளால் கைது செய்யப்பட்டார்.
1981: Xerox PARC நிறுவனத்தினால் கணினி மௌஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
1992: பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 700 வரலாற்றில் முதல் தடவையாக பெண்ணொருவர் (பெட்டி பூத்ரோய்ட்) சபாநாயகராக தெரிவானார்.
1992: ரஷ்யாவும் ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளும் உலக வங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்தன.
1993: ஸாம்பியாவின் தேசிய கால்பந்தாட்ட அணி வீரர்கள் அனைவரும் விமான விபத்தொன்றில் இறந்தனர்.
1994: தென்னாபிரிக்காவில் முதலாவது ஜனநாயக பொதுத்தேர்தல் நடைபெற்றது.
1996: லெபனான் யுத்தம் முடிவுற்றது.
2001: தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
2005: எயார்பஸ் A380 எனும் பாரிய விமானம் தனது முதல் பறப்பை பிரான்ஸில் மேற்கொண்டது
10 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 Mar 2026