Freelancer / 2025 ஜனவரி 31 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.
1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.
1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.
1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.
1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.
1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.
1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.
1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026