Mayu / 2026 மே 14 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீசிய அதிவேகக் காற்றினால், சிறுவன் ஒருவன் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்துடன் கூடிய சூறாவளிக் காற்று வீசி வருகின்றது. இந்நிலையில், வீதியோரம் நின்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை, திடீரென வீசிய அதிவேகக் காற்று நிலத்திலிருந்து உயரே தூக்கியுள்ளது.

கட்டுப்படுத்த முடியாத காற்றின் வேகத்தினால் அந்தச் சிறுவன் பல அடி உயரத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டு, பின்னர் சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளான். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிச் சென்று அந்தச் சிறுவனை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்துள்ளது.
காற்றினால் தூக்கி வீசப்பட்டதில் சிறுவனுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் உயிர் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் நிலவும் இந்தச் சீரற்ற வானிலை காரணமாகப் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, மின்சாரக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று வீசும் வேளைகளில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களைத் திறந்தவெளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago