J.A. George / 2021 ஜூலை 22 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பால்மா இறக்குமதியைக் குறைக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல சிக்கல்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பால்மா இறக்குமதியாளர்கள் இதற்கு முன்னர் பால்மா விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இறக்குமதியாளர்களின் கோரிக்கைக்கு பதில் வழங்கப்படாமை காரணமாக இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago