Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 மே 03 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட ஒருவர் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர் – செங்கலடி பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தி சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் – செங்கலடி பகுதியைச் சேர்ந்த 56 வயதான நவனீதன் பிள்ளை மோகன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் கூறினார்.
சந்தேக நபரிடம் இருந்து ஐ.பேட் மற்றும் ஐ-போன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025