2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளை அறுத்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (எஸ்.மாறன்)
கல்முனை பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில்  பசுக்களை அறுத்த குற்றச்சாட்டில் 6 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக  கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். சில பசுக்களை தாம் மீட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து கல்முனை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட முற்றுகையொன்றின்போது,  மேற்படி 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  வெட்டப்பட்ட நிலையில் மூன்று மாடுகளை கண்டறிந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .