2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றில் பொதுக் கூட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் விசேட நிருவாக பொதுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னணியின் அக்கரைப்பற்று காரியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் 36வது நிறைவு விழாவினை சிறப்பாக நடத்துதல், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி வாழ்த்து கடிதம் அனுப்புதல், மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கோரும் மகஜரினை கையளித்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசியத் தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை, முன்னணியின் மாவட்ட முன்னாள் தலைவர்கள், முன்னணியின் பிரதேச தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் நிருவாகப்பிரிவின் கீழுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் அடங்கிய மகஜரினை மாவட்டத் தலைவரிடம் பிரதேச தலைவர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .