Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்;
அனர்த்தங்கள் பற்றிய அறிவு மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தால், அதிலிருந்து எங்களை நாங்களே பாதுகாக்க முடியுமென கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பெரிய நீலாவணை மக்களுக்கு எற்பாடு செய்த அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'எந்த நேரத்தில் என்ன அனர்த்தம் வருமென்று நாங்கள் யாரும் அறியமாட்டோம.; இருந்தாலும், எந்தநேரத்திலும் அனர்த்தம் ஏற்படலாமென்ற எண்ணம் எம்மிடத்தில் இருக்க வேண்டும்.
மேலும், எமது பிரதேசத்தை நாங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பலர் வடிகான்களில் குப்பைகளைப் போட்டு நிரப்பி விடுகின்றார்கள். இதனால் மழை காலங்களில் நீர்தேங்கி நின்று வெள்ளப்பெருக்கை எற்படுத்துகின்றன. இவ்வாறான விடயங்களை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
கல்முனை பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.நபாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏ.வாஹிர், மருதமுனை திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் சரிபா சாஜகான் ஆகியோருடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
2 hours ago
2 hours ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
01 Oct 2025