2025 ஜூன் 30, திங்கட்கிழமை

50 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட கீரி மீன்கள் பிடிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை கடற்கரை பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட கீரி மீன்கள் இன்று புதன்கிழமை  கரவலைகளில் சிக்கின.

இதில் அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவைச் சேர்ந்த வெள்ளத்தம்பி ஹாஜியார் என்பரின் கரைவலையில் சுமார் 25 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட கீரி மீன்கள் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடந்த ஒரு வாரகாலமாக கரவலையில் மீன்கள் சிக்கிவருவதனால் பொதுமக்கள் அச்சம் கொண்டு காணப்படுகின்றனர். கடந்த காலம் சுனாமி அனர்த்தம் ஏற்படும் முன்னர் இவ்வாறு கரவலைகளில் மிகக் கூடுதலான மீன்கள் பிடிபட்டு வந்ததாகவும், பின்னர் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதாகவும் பொதுமக்களும் கடல் மீன்பிடிப்பாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X