2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கும் தமிழ் பட்டதாரிகள்

Niroshini   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புதன்கிழமை(30) கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அமைப்பின் தலைவர் எம்.திலீபன் தெரிவித்தார்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்கப்பட வேண்டும், கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் இன விகிதாசாரம் பேணி தமிழ் பட்டதாரிகளை புறக்கணிப்பை நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த உண்ணாவிரதப் போரட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் இதில் சுமார் 300 வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .