2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'கல்வித்துறையை முன்னிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி முயற்சி செய்கிறார்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கல்வித்துறையை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும் முயற்சி செய்துவருகின்றாரென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 90 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் ஆய்வுகூடத்தையும் அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 40 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட  வகுப்பறைக் கட்டடத்தையும் திறந்துவைக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் கல்விக்கென்று விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திறமையுள்ள மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்குவதற்கான  செயற்றிட்டங்களை உருவாக்குவதற்கான பணியில் ஜனாதிபதி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். எந்தவித பேதங்களுக்கும் அப்பால் எல்லோரும் இலங்கையர் என்ற அடிப்படையில் இலங்கையில் பிறந்த மாணவர்கள் சர்வதேச தரத்திலான தகுதிகளையும் வாய்ப்புக்களையும் பெறவேண்டும் என்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றது' என்றார்.

இந்த நிகழ்வில்  கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், விசேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.ஆர்.எம்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யாஸிர் அறபாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X