2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சைவசமயப் பரீட்சைக்குத் தோற்றுமாறு மாணவர்களுக்குப் பணிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 10 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்புப் பிரதேச இந்து மா மன்றத்தால் நடத்தப்படும் சைவசமயப் பரீட்சை சனிக்கிழமை  (12) திட்டமிட்டபடி நடைபெறும் எனப்  பரீட்சைக் குழுத் தவைலவரும் இந்து மா மன்ற இணைப்பாளருமான ம.காளிதாசன் தெரிவித்தார்.

3ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரணதரம் வரையான மாணவர்களுக்கு நடத்தப்படும் இப்பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இப்பரீட்சையானது வலயக் கல்வி அதிகாரிகளின் அனுமதியுடன் அங்கிகாரத்துடனும் நடத்தப்படுவதால் வழங்கப்படும் சான்றிதழ்கள் சட்ட ரீதியானதாகவும் வலுவுள்ளதாகவும் அமையும் எனத் தெரிவித்த இந்து மா மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம், மாணவர்களைத் தவறாது பரீட்சைக்குத் தோற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .