2025 ஜூன் 26, வியாழக்கிழமை

“திணைக்களத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தொழிற் சங்கங்கள் தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி. விவேகானந்தலிங்கம் தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் அங்கத்தவர்களுக்கு அஞ்சல் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் வை.எம்.என்.எஸ். பண்டார தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் தொழிற் சங்க விடயங்கள் தொடர்பான செயலமர்வில்  கலந்துகொண்டு உரையற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தொழிற் சங்கங்கள் எப்போதும் அரசியல் பின்னணியில் இயங்கக் கூடாது.ஒரு முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால்தான் ஒரு வலுவான தொழிற்சங்கமாக இயங்க முடியும்.

தொழிற்சங்கங்கள் வெறுமென போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது. எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும்.

அந்த வகையில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு நான் பாராட்டுகின்றேன். அஞ்சல் திணைக்களத்துக்கு இத் தொழிற்சங்கம் ஒரு வழிகாட்டியாக செயற்படும் என்பதில் ஐயமில்லை.

தபால் திணைக்களம் நவீன மயப்படுத்தப்பட்டு புதிய பரினாமத்துடன் தொழில்நுட்ப ரீதியிலான மக்களுக்கு பயன்தரக் கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கி மிகவும் சிறந்த முறையில் அவ்வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் தபால் திணைக்களம் அதன் இலக்கை அடைவதோடு மக்களுக்கான சேவையையும் முன்னெடுத்து செல்ல முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .