Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை, கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதனை அச்சுறுத்தி வந்த நபர் செவ்வாய்க்கிழமை(13) பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து நேரடியாக பிரதேச செயலாளரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியதையடுத்து அவருக்கெதிரான பொலிஸ் முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கல்முனையைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் ஒருவரே சில நாட்களுக்கு முன்னர் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக பிரதேச செயலாளர் லவநாதன் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது குறித்த நபர் நேரடியாக பிரதேச செயலாளரிடம் மன்னிப்புக்கோரியிருந்தார்.
எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் குறித்த நபரிடமிருந்து பகிரங்க மன்னிப்புக் கோரல் கிடைத்த பின்னர் தான் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்த முறைப்பாட்டை நிபந்தனையின் பேரில் விலக்கிக் கொண்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
01 Oct 2025