2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

13 பறவைகளை பிடித்தவருக்கு அபதாரம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச பிரிவிலுள்ள அன்னமலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக 13 பறவை இனங்களை பிடித்த ஒருவருக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை குறித்த பிரதேசத்திலுள்ள குளத்தில் சங்கூசி பயன்படுத்தி பறவைகளை பிடித்துக் கொண்டிருந்த போதே  குறித்த நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்து அவரிடமிருந்து 13 பறவைகளையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X