2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 18 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, திருக்கோவில் தாண்டியடி வயல் பிரதேசத்தில் வயலுக்கு சென்ற விவசாயி ஒருவரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் 2ஆம் பிரிவு நாவலடி வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய விவசாயி  சம்பவதினமான காலை தாண்டியடி கல்குவாரிக்கு அருகாமையிலுள்ள வயலுக்கு வேளாண்மைக்கு தெளிகருவி மூலம் மருந்து தெளிப்பதற்காக சென்ற நிலையில் சென்றபோது யானை தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்

இதனையடுத்து இவரை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .