2025 மே 19, திங்கட்கிழமை

வீரமுனையில் கொல்லப்பட்டவர்களின் 26ஆவது வருட நினைவுதினம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, வீரமுனைப் பிரதேசத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் 155 பேர் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டு 26ஆவது வருட நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது.

வீரமுனை விசேட பூஜை வழிபாட்டுடன் ஆலயத்துக்கு அருகில்; அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மக்கள் சென்று ஆத்மசாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிரார்த்தித்தனர்.

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வீரமுனை கிராமத்தில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் 155 பேர்,  1990ஆம் ஆண்டு 8;ஆம் மாதம் 12ஆம் திகதி வீரமுனை காளிகோவில் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X